உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குலசேகரம் அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-01-21 08:27 GMT   |   Update On 2023-01-21 08:27 GMT
  • குலசேகரம் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி:

குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 50). தொழிலாளி. இவருக்கு உஷா (42) என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் சுமார் 5 ஆண்டுகளக பிரிந்து தனியாக வசித்து வந்தனர்.

உஷா மணலிகரை பகுதியில் தனியாக வசித்து வருகிறார். ரெதீஷ் தன் தாயாருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று மதியம் சாப்பிடுவதற்காக இவரது தாய் ரெதீஷின் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு கதவு உள்பக்கம்மாக பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது வீட்டு உத்திரத்தில் ரெதீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி அக்கம் பக்கத்தினர் குலசேகரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News