இரணியல் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
- திருமணம் ஆகாததால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
- இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள நுள்ளிவிளை அடுத்த மூலச்சன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 36). கூலி தொழிலாளி.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற ராஜேஷ்குமார் நேற்று காலை விடிந்தும் படுக்கை அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்குப் போட்டு ராஜேஷ்குமார் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் பாக்கியலட்சுமி (65) இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.