திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
- கஞ்சா விற்பதாக கூறி மிரட்டுகின்றனர்
- வீரமார்த்தாண்டன்புதூரில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வீர மார்த்தாண்டன் புதூர் பகுதியை சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வீரமார்த்தாண்டன்புதூரில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகிறோம். நாங்கள் அன்றாடம் சிறு, குறு தொழில் செய்து பிழைப்பை நடத்தி வருகிறோம்.
இந்நிலையில் எங்கள் பகுதிக்கு கடந்த 28-ந்தேதி மாலை மது விலக்கு பிரிவு போலீசார் என கூறி 2 பேர் வந்தனர். அவர்கள் எங்களிடம் கஞ்சா மற்றும் மது வியாபாரம் செய்வதாக கூறி எங்களை மிரட்டினர். ஆதலால் திருநங்கைகளுக்கு அவப்பெயர் ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.