உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 

திருவட்டார் அருகே ரூ. 3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2023-01-07 13:37 IST   |   Update On 2023-01-07 13:37:00 IST
  • மோட்டார் சைக்கிளில் கடத்தியவர் கைது
  • தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று அரசு நடவடிக்கை

கன்னியாகுமரி:

தமிழகத்தில் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு துறைகள் மூலம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் அதிரடி நட வடிக்கை எடுத்து போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து வருகிறார். அவரது நடவடிக்கையின் மூலம் பல பகுதிகளில் இருந்தும் கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தினமும் வாகன சோதனை, கடைகளில் அதிரடி சோதனை என தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் குட்டக் குழி பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திரு வட்டார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமை யிலான போலீசார் அங்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். இதில் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாலிபர் கொடுத்த தகவ லின் பேரில், குட்டக்குழி பகுதியில் மறைத்து வைத்து இருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வட்டவிளை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என தெரியவந்தது.

Tags:    

Similar News