உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

குலசேகரன்புதூர் ரெயில்வே கேட் பழுது

Published On 2023-01-27 13:25 IST   |   Update On 2023-01-27 13:25:00 IST
  • வாகன ஓட்டிகள் அவதி
  • 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில்:

நாகர்கோவில் வெள்ள மடம் அருகே உள்ள குலசேகரன்புதூர் பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் சில சமயம் பழுதாகி திறக்கமுடியாத நிலை ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சரக்கு ரெயில் ஒன்று சென்றது. இதற்காக குலசேக ரன்புதூர் ரெயில்வே கேட் மூடப்பட்டன. ரெயில் சென்றதும் ஊழியர் ரெயில்வே கேட்டை திறக்க முயற்சித்தார்.

ஆனால் கேட் பழுதாகி திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஊழியர், எவ்வளவு முயற்சித்தும் ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்தார்கள்.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நீண்ட நேரமாகியும் கேட் திறக்கப் படாததால், மாணவர்கள் சிலர் வாகனங்களில் இருந்து இறங்கி பள்ளி, கல்லூரிக்கு நடந்தே சென்றார்கள். வாகன ஓட்டிகள் பலரும் மாற்று பாதை வழியாக சென்றனர். இதற்கிடையே ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே கேட் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து பொது மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட் பழுதாவது அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த ரயில்வே கேட் பகுதியில் சுரங்க பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News