உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

திருவனந்தபுரம் செல்லும் பஸ்களில் முக கவசம் அணிந்து பயணம் செய்த பயணிகள்

Published On 2023-01-18 07:27 GMT   |   Update On 2023-01-18 07:27 GMT
  • கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது.
  • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்:

சீனாவில் மீண்டும் கொேரானா பரவல் அதிக ரித்து உள்ள நிலையில் தமிழ கத்தில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாடு களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகி றார்கள். குமரி மாவட்டத்தை ஓட்டியுள்ள கேரளாவில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருவ னந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து பஸ்களிலும் டிரைவர் கண்டக்டர்கள் முககவசம் அணிந்து பஸ் களை இயக்கி வருகிறார்கள். பஸ் பயணி களும் கட்டா யம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து திருவனந்த புரத்திலிருந்து நாகர்கோவி லுக்கு வந்த அனைத்து பஸ் களிலும் பயணிகள் முக கவசம் அணிந்து இருந்தனர்.

இதே போல் வடசேரி யில் இருந்து திருவனந்த புரத்திற்கு செல்லும் பஸ்களிலும் டிரைவர், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர். களியக்கா விளையை தாண்டி திருவனந்த புரத்திற்கு செல்லும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரி கள் அறிவுறுத்தி உள்ளனர்.

குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் பெரும்பா லான ஆஸ்பத்திரிகளிலும் முககவசம் கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. ஆஸ்பத்தி ரிக்கு வரும் பொதுமக்கள் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிய தொடங்கி உள்ளனர்.குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் கடந்த சில நாட்க ளாக கொரோனா பாதிப்பு எதுவும்

இல்லை. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சளி தொல்லை, மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக பக்கத்தில் உள்ள சுகாதார மையத்தில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்

கொரோனாவை கட்டுப் படுத்தும் வகையில் தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப் பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா பரவல் அதிக ரிக்க தொடங்கியதை யடுத்து தடுப்பூசி செலுத்துவதற்காக அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு சென்றனர்.

ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது.

Tags:    

Similar News