உள்ளூர் செய்திகள்

இதயவியல் நிபுணர் டாக்டர் சரவணன்

பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் லண்டன் குடியுரிமை பெற்ற டாக்டர் இயக்குனராக பதவியேற்கிறார்

Published On 2022-12-11 08:37 GMT   |   Update On 2022-12-11 08:37 GMT
  • இவர் லண்டனில் உள்ள விர்ரல் பல்கலைகழக மருத்துவமனையில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்
  • சென்னையில் உள்ள எம்.ஐ.ஓ.டி. சர்வதேச மருத்துவமனையிலும், பெங்களூரு மருத்துவமனையிலும் பணியாற்றியுள்ளார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெசா லிட்டி மருத்துவமனையில் லண்டன் குடியுரிமை பெற்ற இதயவியல் நிபுணர் டாக்டர் சரவணன் (வயது 53) நாளை (திங்கட்கிழமை) முதல் முழுநேர மருத்துவ மனை இயக்குனராகவும் இருதய வியல் துறை தலைவராகவும் பதவியேற்கிறார். இவர் எம். பி.பி.எஸ்., எம்.டி. பட்டங்களை மதுரை மருத்துவ கல்லூரி யிலும், எப்.ஆர். சி.பி. லண்ட னிலும், சி.சி.டி. லண்ட னிலும், சி.சி.டி.எஸ். அமெரிக்காவிலும், எப்.இ. எஸ்.இ. லண்டனிலும் படித்துள்ளார்.

இவர் லண்டனில் உள்ள விர்ரல் பல்கலை கழக மருத்துவமனையில் பல ஆண்டுகள் பணி யாற்றிவிட்டு, சென்னையில் உள்ள எம்.ஐ.ஓ.டி. சர்வதேச மருத்துவமனையிலும், பெங்களூரு மருத்துவமனை யிலும் பணியாற்றியுள்ளார்.

இவர் ரத்த ஓட்ட சோதனை இதய தமனி களில் ரத்த ஓட்டத்தை பரிசோதித்தல், மூடிய இதய தமனிகளை திறந்து பின்னர் ஸ்டென்ட் பொருத்துதல், இதய முடுக்கி பொருத்து தல், இதய படபடப்பு தடுப்பு மற்றும் உயிர் காக்கும் எந்திரம் பொருத்துதல், இதய மறு சீரமைப்பு, இதய முடுக்கி பொருத் துதல், இதய மின் இணைப்புக்களை சோதித்தல் போன்ற சிகிச் சைகள் அளிக்கிறார்.

இவரை பொன் ஜெஸ்லி குழு மங்களின் தலைவர் பொன்.ராபர்ட் சிங், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜார்ஜ். இருதயவியல் டாக்டர்கள் ஸ்ரீதரசுதன், வெங்கடேஸ் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணி யாளர்கள் வாழ்த்தினர்.

Tags:    

Similar News