மார்த்தாண்டம் அருகே இன்சூரன்ஸ் ஊழியருக்கு உருட்டுகட்டை அடி
- பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு
- மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா விஜயகுமார் (வயது 45). இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளியூருக்கு சென்ற நிலையில் ராஜா விஜயகுமார் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அனிக்குமார் (27), ஆஷிக் (21), ஆஷிப் (19), விஜிகுமார் (36), ஷகிலா (47) ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உருட்டு கட்டையால் ராஜா விஜயகுமாரை அடித்தனர்.
இதில் அவருக்கு இடது கண், அடி வயிறு மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வலியால் அலறியுள்ளார்.
இதைடுத்து அப் பகுதியைச் சேர்ந்வர்கள் விரைந்து வந்தனர். அவர் களை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.