மேலகிருஷ்ணன்புதூர் அருகே மீனவர் தூக்குபோட்டு தற்கொலை
- நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை
- சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள பள்ளம் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாண் (வயது 44). கடலில் மீன் பிடி தொழில் செய்து வந்தார்.
இவருக்கு விஜி என்ற மனைவியும், 2 மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஜாணுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஜாணை மது குடிக்க கூடாது என விஜி கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஜாண் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.