உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

என்.ஜி.ஓ.காலனி அருகே நிதி நிறுவன அதிபர் மீது தாக்குதல்

Published On 2023-01-21 09:21 GMT   |   Update On 2023-01-21 09:21 GMT
  • 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
  • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள கீழ குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (61). இவர் என்.ஜி.ஓ. காலனியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். முருகேசன் தினமும் காலையில் நிதி நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு பின்னர் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று முருகே சன் இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்தனர். முருகேசன் வீட்டிற்கு வந்ததும் மோட்டார் சைக்கி ளை நிறுத்தி விட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 பேர் கும்பலில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி அவதூறாக பேசி முருகேசனை சரமா ரியாக தாக்கினர். இதில் காயமடைந்த முருகேசன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர். காயமடைந்த முருகேசனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து முருகேசன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயி லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News