உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

ஆரல்வாய்மொழியில் மனைவியுடன் கடைக்குச் சென்ற போலீஸ்காரர் மீது சரமாரி தாக்குதல்

Published On 2022-12-04 13:35 IST   |   Update On 2022-12-04 13:35:00 IST
  • முன்விரோதம் காரணமாக தாக்குதல்
  • பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

கன்னியாகுமரி:

ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் லைப்ரரி தெருவை சேர்ந்தவர் ஐசக் ராஜன்.

இவர் நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராகஉள்ளார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த டேவிட் அய்யாப்பழம் என்பவ ருக்கும் இடையே முன்விரோ தம் உள்ளது.

சம்பவத்தன்று ஐசக் ராஜன், தனது மனைவி ரெமிலா (வயது29) வுடன் பைக்கில் கடைக்கு புறப்பட்டார். அப்போது அங்கு டேவிட் அய்யா பழம் வந்தார்.

அவர், ஐசக்ராஜனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு அவரது கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுத்ததாகவும் இதை தட்டிக் கேட்ட ரெமிலாைவ கீழே தள்ளி தாக்கியதாகவும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது அதன் அடிப்படையில் போலீசார் டேவிட் அய்யாபழம் மீது பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News