உள்ளூர் செய்திகள்

சாலையில் பிணமாக கிடந்த முதியவர்

குழித்துறை அருகே சாலையில் பிணமாக கிடந்த முதியவர்

Published On 2023-02-03 08:07 GMT   |   Update On 2023-02-03 08:07 GMT
  • தொடரும் மர்மச் சாவுகளால் பரபரப்பு
  • பல கோணங்களில் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் இன்று காலை பொது மக்கள் சாலையில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர்.

இதுகுறித்து அவர்கள் களியக்காவிளை போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சாலையில் கிடந்த முதியவர் இறந்திருப்பது தெரிய வந்தது.

அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த அந்த முதியவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரை யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா? அல்லது வேறு காரணங்களால் அவர் இறந்தாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் டிரைவர் மணிகண்டன் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்று முதியவர் பிணமாக கிடந்துள்ளார். இந்த தொடர் சம்பவங்கள் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News