நாகர்கோவிலில் இன்று ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் - 30 பேர் கைது
- பணியாளர்களுக்கு ரூ.21 ஆயிரத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்
- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
நாகர்கோவில்:
பணியாளர்களுக்கு ரூ.21 ஆயிரத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
நலவாரிய பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை குமரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க குழு வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அனில் குமார் தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், கல்யாணசுந்தரம், இசக்கி முத்து, நாராயணசாமி, அருணாச்சலம், சுரேஷ் மேசியாதாஸ் உள்பட பலர் மறியலில் கலந்து கொண்ட னர். அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்ட தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியல் போராட்டம் காரணமாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பி ரண்டு நவீன் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.