உள்ளூர் செய்திகள்

பஸ்சுக்குள் இறந்து கிடந்த ஏசுதாசை போலீசார் தூக்கி வந்த காட்சி.

கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி மர்மச் சாவு

Published On 2022-12-21 15:25 IST   |   Update On 2022-12-21 15:25:00 IST
  • பஸ்சுக்குள் பிணமாக கிடந்தார்
  • பணிமனையின் தொழில்நுட்ப பிரிவில் மெக்கானிக் உதவியாளராக பணி செய்து வந்தார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பலசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 58).

இவர் கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவ ரத்துக் கழக பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அந்தப் பணி மனையில் செயல்படும் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற் சங்கத்தில் முன்பு தலைவராக செயல்பட்டு உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏசுதாசுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மாற்றுப் பணியாக பணிமனையின் தொழில் நுட்ப பிரிவில் மெக்கானிக் உதவியாளராக பணி செய்து வந்தார்.

நேற்று அவர் இரவுப் பணிக்கு வந்துள்ளார். இரவில் அவர் பணிமனையில் நின்ற பஸ்சில் படுத்து தூங்கினார். இந்த நிலையில் இன்று காலை அவர் பஸ்சுக்குள் பிணமாக கிடந்தார். அவர் எப்படி என்பது மர்மமாக உள்ளது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று ஏசுதாஸ் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பணிமனைக்குள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மர்மமாக இறந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News