உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

கொட்டாரத்தில் போட்டோகிராபரை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

Published On 2022-12-27 13:32 IST   |   Update On 2022-12-27 13:32:00 IST
  • இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது
  • காயம் அடைந்த நபர் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

கன்னியாகுமரி:

கொட்டாரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 50). இவர் கன்னியா குமரிகடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்கு போட்டோ எடுத்து உடனடியாக பிரிண்டு தயார் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்ற சுரேஷ் (54). இவர் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. துணை செய லாளராகவும் கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவரும் கன்னியா குமரியில் சுற்றுலா பயணிகளுக்கு போட்டோ எடுத்து உடனடியாக பிரிண்டு தயார் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொட்டாரத்தில் சம்ப வத்தன்று இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம்அடைந்த சுப்பிர மணியன் மரக்கட்டை யால் மணிகண்ட னைசரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் மணிகண்டனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணிகண்டனின் மனைவி மாலா கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News