உள்ளூர் செய்திகள்

பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.

ஆழ்வார் திருநகரியில் கனிமொழி எம்.பி. பிறந்த நாள் நிகழ்ச்சி

Published On 2023-01-06 09:15 GMT   |   Update On 2023-01-06 09:15 GMT
  • தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பிறந்த நாள் விழா ஆழ்வார்திருநகரியில் கொண்டாடப்பட்டது.
  • பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.

தென்திருப்பேரை:

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. ஆழ்வை பேரூர் தி.மு.க. செயலாளர் கோபிநாத், பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் பேரூர் செயலாளர் முத்துராமலிங்கம், கவுன்சிலர்கள் ராஜலட்சுமி, ஹஜராபேகம், மந்திரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News