உள்ளூர் செய்திகள்

தகுதி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்

டெனிகாய்ட் போட்டியில் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாநில போட்டிக்கு தகுதி

Published On 2022-11-09 08:20 GMT   |   Update On 2022-11-09 08:20 GMT
  • டெனிகாய்ட் போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
  • முதலிடம் பெற்ற 7 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்

சங்கரன்கோவில்:

தென்காசி வருவாய் மாவட்ட அளவிலான டெனிகாய்ட் போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்துள்ளார்கள். மாணவர்கள் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் முதலிடமும், மூத்தோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் 2-ம் இடமும், மாணவிகள் இளையோர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடமும், மிக மூத்தோர் பிரிவில் இரட்டையர் பிரிவில் 2-ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

முதலிடம் பெற்ற 7 அணிகளும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News