உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2022-07-29 07:02 GMT   |   Update On 2022-07-29 07:02 GMT
  • பண்ருட்டி அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
  • காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகிறார்.

கடலூர்:

பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் கொளஞ்சிகுப்பம் மாரியம்ம ன்கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யானந்தன். இவரது மனைவி ராதா (வயது 37). இவர், காடாம்புலியூர் தோப்பில் நேற்று மாலை ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர் ராதாவை மிரட்டி இவர்அணிந்து இருந்த தாலிசெயின் மற்றும் செல்போனை பறித்து சென்றார். இது குறித்து காடாம்பு லியூர் போலீஸ் நிலையத்தி ல் ராதா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காடாம்பு லியூர் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சந்திரன் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News