உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ஒட்டன்சத்திரத்தில் பெண்ணிடம் நகை திருட்டு

Published On 2023-04-16 12:47 IST   |   Update On 2023-04-16 12:47:00 IST
  • தனது மணிபர்சில் தங்க நகையை வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டுக்கு வந்தார்.
  • காய்கறிகளை வாங்கிவிட்டு பையை பார்த்தபோது அதிலிருந்த தங்கநகை மாயமாகி இருந்தது.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் பழைய ஹவுசிங்போர்டு ஏ.பி.பி நகரை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி செல்வி(50). இவர் தனது மணிபர்சில் தங்க நகையை வைத்துக்கொண்டு ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட்டு க்கு வந்தார். காய்கறிகளை வாங்கிவிட்டு பையை பார்த்தபோது அதிலிருந்த தங்கநகை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

மேலும் மார்க்கெட் சங்க தலைவர் பாலு உள்பட பலர் நகையை தேடியும் கிடை க்காததால் ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News