உள்ளூர் செய்திகள்
மேல்மலையனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
- இந்திரா வீட்டைப் பூட்டிவிட்ட வேலைக்குச் சென்றுவிட்டார்.
- இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடி மனைவி இந்திரா (50) கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இந்திரா வீட்டைப் பூட்டிவிட்ட வேலைக்குச் சென்றுவிட்டார். வேலை முடிந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 33/4 பவுன் தங்க நகைகள், 1/4 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.