உள்ளூர் செய்திகள்

அச்சரப்பாக்கத்தில் ஆசிரியையிடம் நகை பறிப்பு

Published On 2023-04-06 07:48 GMT   |   Update On 2023-04-06 07:48 GMT
  • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலி பர்கள் முகவரி கேட்பது போல் செந்தமிழ் செல்வியிடம் பேச்சு கொடுத்தனர்.
  • நிலைதடுமாறிய செந்தமிழ் செல்வி தவறி கீழே விழுந்தார்.

மதுராந்தகம்:

அச்சரப்பாக்கம் அடுத்த பள்ளிப்பேட்டை மின்வாரிய குடியிருப்பு அருகில் வசிப்பவர் சிவ சண்முகம். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. படப்பையில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் ஆங்கில ஆசிரியைாக வேலைபார்த்து வருகிறார்.

நேற்று மாலை அவர்பணி முடிந்ததும் பள்ளியில் இருந்து பஸ் மூலம் அச்சரப்பாக்கம் பஸ்நிலையம் வந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலி பர்கள் முகவரி கேட்பது போல் செந்தமிழ் செல்வியிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென அவர்கள் செந்தமிழ்ச்செல்வி அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து தப்பி சென்றுவிட்டனர். இதில் நிலைதடுமாறிய செந்தமிழ் செல்வி தவறி கீழே விழுந்தார். இதுகுறித்து அவர் அச்சரப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவு களை வைத்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News