உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கடன் தொல்லையால் நகைக்கடை உரிமையாளர் தற்கொலை

Published On 2023-08-01 10:20 IST   |   Update On 2023-08-01 10:20:00 IST
  • தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் திணறி வந்தார்.
  • இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவர் காசுக்கடை சந்தில் உள்ள பஜாரில் நகை கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தொழில் சம்மந்தமாக வெளியில் அதிக அளவில் கடன் வாங்கி இருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் திணறி வந்தார்.

மேலும் குடும்பத்தில் பிரச்சினை இருந்ததால் மன உளைச்சலில் காணப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News