ஊதியம் உயா்த்தி வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை
- தமிழக ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், நாமக்கல் சி.ஐ.டி.யு. மாவட்டக் குழு அலுவலகத்தில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
- 3 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
நாமக்கல்:
தமிழக ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில், நாமக்கல் சி.ஐ.டி.யு. மாவட்டக் குழு அலுவலகத்தில் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இக்கூட்டத்தில், தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், 31 சதவீத அகவிலைப்படி உயா்வை நடப்பு ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கவும், ஊதிய உயா்வு மற்றும் அகவிலைப் படியையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.