உள்ளூர் செய்திகள்

மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்ட காட்சி.

ஆலங்குளத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

Published On 2023-05-25 08:52 GMT   |   Update On 2023-05-25 08:52 GMT
  • ஆலங்குளம் வட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
  • மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் வட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. முதல் நாள் கீழப்பாவூர் குறுவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார். இன்று நெட்டூர், நாளை (26-ந்தேதி) புதுப்பட்டி, 30-ந்தேதி வெங்கடாம்பட்டி, 31-ந்தேதி ஆலங்குளம் குறுவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் தாசில்தார் கிருஷ்ணவேல், கீழப்பாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.க்கள், நில அளவைப்பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News