உள்ளூர் செய்திகள்

ஜெகதேவி பசவேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-01-19 15:12 IST   |   Update On 2023-01-19 15:12:00 IST
  • கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது.
  • பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டன.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பசவேஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 16-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களாக பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை மூன்றாம் கால யாக பூஜை, கணபதி பூஜை, ஹோமங்கள், மகா தீபாராதனை, கும்ப கலச புறப்பாடு ஆகியவை நடந்தது.

காலை 9:30 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பசவேஸ்வர சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், கற்பூர தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் பசவேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News