உள்ளூர் செய்திகள்

குவாரிகளில் விதிமீறலை ஆய்வு செய்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்-வருவாய்துறை செயலாளருக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. மனு

Published On 2022-07-10 08:34 GMT   |   Update On 2022-07-10 08:34 GMT
  • விதிகளை மீறி அந்த குவாரிகள் செயல்படுகின்றன என்பதை தெரிவித்தும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய முன்வரவில்லை.
  • கடந்த 5-ந்தேதி ஆலங்குளம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டம் நடைபெற்றது.

நெல்லை:

தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் மற்றும் தொழில்துறை செயலாளர் ஆகியோருக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விதி மீறல்

ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் குவாரிகளால் அந்த கிராமம் மற்றும் ஆண்டிபட்டி ஊராட்சிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

விதிகளை மீறி அந்த குவாரிகள் செயல்படுகின்றன என்பதை தெரிவித்தும் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய முன்வரவில்லை. அதனை ஆய்வு செய்து விதிமீறல் நடந்திருந்தால் குவாரியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

கடந்த 5-ந்தேதி ஆலங்குளம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் குவாரிகள் அதற்கான உரிமம் பெற்ற காலம் வரை செயல்படும் என்றும், வெடி வைப்பதை பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் தெரிவித்து பொதுமக்களை அனுப்பி வைத்து விட்டனர்.

இந்த குவாரிகளில் சக்தி வாய்ந்த வெடி மருந்து கையாளப்பட்டு போர்வெல் எந்திரங்கள் மூலம் துளையிடப்பட்டு பாறைகள் தகர்க்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News