உள்ளூர் செய்திகள்

செயிண்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள்

Published On 2023-08-21 10:11 GMT   |   Update On 2023-08-21 10:11 GMT
  • முதல், 2-ம், 3-ம் ஆண்டு துறைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
  • செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தலைவர் பி.சி. போஸ் மற்றும் செயலாளர் லூர்து போஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோ ப்பையை வழங்கினார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சூலாமலை யில் செயிண்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் அனைத்து துறை மாண வர்களுக்கு இடையேயான போட்டிகள் விங்க்ஸ் 2023 என்ற பெயரில் நடந்தது.

இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், நடன போட்டிகள், பேச்சு போட்டிகள், சிறப்பு பட்டிமன்றம், கவிதை போட்டிகள் நடைபெற்றது.

இதில் முதல், 2-ம், 3-ம் ஆண்டு துறைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

இதில் அதிக போட்டி களில் வென்று முதலிடம் பிடித்த கணினி, இ.சி.இ. மற்றும் சிவி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் சுழற்கோப்பையை தட்டி சென்றனர்.

இந்த விழாவிற்கு செயிண்ட் ஜோசப் கல்வி குழுமத்தின் தலைவர் பி.சி. போஸ் மற்றும் செயலாளர் லூர்து போஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோ ப்பையை வழங்கினார்கள்.

இந்த விழாவில் செயிண்ட் ஜோசப் பாலி டெக்னிக் கல்லூரி இயக்குனர் குமரேசன், முதல்வர் சையத் ஆசிப் அகமது, துணை முதல்வர் ராகவேந்திர பிரசாத் மற்றும் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி னார்கள்.

Tags:    

Similar News