உள்ளூர் செய்திகள்

மருதூர் தெற்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் கூடுதல் பதிவாளர் குமார் ஆய்வு செய்தார்.

வேதாரண்யம் பகுதி கூட்டுறவு கடன் சங்கத்தில் கூடுதல் பதிவாளர் ஆய்வு

Published On 2023-01-11 08:13 GMT   |   Update On 2023-01-11 08:13 GMT
  • தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பு முதல் நாள் அன்று 24 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டது.
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவுசங்களின் கூடுதல் பதிவாளர் குமார் ஆய்வு செய்தார் ஆய்வின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபடும் பொங்கல் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் அரிசி, சீனி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அளவு சரியாக உள்ளதா எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார் பின்பு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து கிராமபு ரத்தில் 4 கோடி ருபாய் டெபாசிட் வைத்து சிறப்பாக பொதுமக்களக்கு சேவையாற்றும் மருதூர் தெற்கு கூட்டுறவு சங்க அதிகாரிகளைபாராட்டினர்

பின்பு கடந்த ஆண்டு நவம்பர் 12ந் தேதிஇந்த வங்கியில் நடைபெற்ற வங்கி கொள்ள முயற்சி குறித்து கேட்டறிந்தார் பின்பு தற்போது வங்கிக்குகூடுதல் பாதுகாப்பு காவலர் அறை ஆகியவற்றை பார்வை யிட்டார் ஆய்வின்ன்போது மண்டல இணை பதிவாளார் அருள் அரசு, கூட்டுறவு சார்பதிவாளர் சண்முகபிரியா கூட்டுறவு சங்க தலைவர

சோமசுந்தரம் இயக்குனர் உதயம் முருகையன் செயலாளர்கள் அசோகன்' வீரமணி உள்ளிட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டார் இதே போல் வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம், ஆதனூர், வேதாரண்யம்-தேத்தாகுடி தெற்கு உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டர் பின்பு செய்தியாளர்களிடம் கூட்டுறவு சங்கத்தின் கூடுதல் பதிவாளர் குமார் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பு முதல் நாள் அன்று 24 சதவிதம் வழங்கப்பட்டுவிட்டது நேற்று வரை 70 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபட்டுவிடும் என்றார்

Tags:    

Similar News