உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆய்வு மேற்கொண்டு வெளியே வந்தபோது எடுத்தபடம்.

அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2023-05-05 08:57 GMT   |   Update On 2023-05-05 08:57 GMT
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் இதுவரை பதியப்பட்டுள்ள வழக்குகள், அதுகுறித்த ஆவணங்களை பார்வையிட்டார்.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது போலீஸ் நிலையத்தில் இதுவரை பதியப்பட்டுள்ள வழக்குகள், அதுகுறித்த தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாக போலீசாரிடம் கேட்டறிந்து வழக்கு விவர ஆவணங்களை பார்வையிட்டார்.

பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள கைதிகள் அறை, வழக்கு ஆவணங்கள் பாதுகாப்பு, பராமரிப்பு அறையை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட நிலைய போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News