உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த நிலையில் உள்ள சாலை.

நெல் கொல்முதல் நிலையம் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

Published On 2023-02-16 09:46 GMT   |   Update On 2023-02-16 09:46 GMT
  • விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாமல் அவதி.
  • நெல் மூட்டைகள் ஏற்றி வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கிறது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.

இந்த கொள்முதல் நிலையத்திற்கு செல்ல மண்சாலை தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறுவை, சம்பா அறுவடை நேரங்களில் பருவம் தவறி செய்யும் மழையால் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்று சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

கடந்த 2016 -ம் ஆண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.

இடையாத்தங்குடி, கணபதிபுரம், சேஷமூலை, கிடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிற்கு சாகுபடி நிலங்கள் உள்ளது.

இங்கு அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் முழுவதும் இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் கொள்முதல் செய்ய ப்படும்.

இந்த நிலையில் சாலை மண்சாலையாக இருப்பதால் நெல் மூட்டைகள் ஏற்றி வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கிறது.

இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்களை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News