உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி
- கொடைக்கானலில் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
- இதில் பலர் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாணவிகளுக்கு 200 இருக்கைகள் தனியார் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்போடு வழங்கப்பட்டது.
அதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அன்னை தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தனியார் பள்ளி நிறுவனர் சாம்பாபு தலைமை தாங்கி மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தார்.
கொடைக்கானல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.