உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விழிப்புணர்வு கையேடு

Published On 2022-11-30 07:25 GMT   |   Update On 2022-11-30 07:25 GMT
  • கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
  • ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.

நாகப்பட்டினம்:

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்ட விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

இதை அடுத்து திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு விழிப்புணர்வு கையேடு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி யின் தாளாளர் முனைவர்.வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன், மற்றும் துணை முதல்வர் துறை தலைவர்கள் நிர்வாக அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.

Tags:    

Similar News