உள்ளூர் செய்திகள்
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறை தேசிய மாநாடு
- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் தேசிய அளவிலான மாநாடு நேற்று நடந்தது.
- பேராசிரியை பிரபாமனீஸ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் தேசிய அளவிலான மாநாடு நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். இணை பேராசிரியை சித்ரா தேவி வரவேற்று பேசினார். தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் செல்வி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி கணினி துறை இணை பேராசிரியை பிரபாமனீஸ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு மாணவர்களின் ஆராய்ச்சி தொகுப்பினை இணை பேராசிரியர்கள் மதிப்பீடு செய்தனர். உதவி பேராசிரியை ரம்யா நன்றி கூறி–னார்