உள்ளூர் செய்திகள்

கோவையில் நகைபறிப்பு கொள்ளையர்கள் ஊடுருவல்

Published On 2023-08-28 09:09 GMT   |   Update On 2023-08-28 09:09 GMT
  • கொள்ளையர்களை பிடிக்க விடிய, விடிய தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
  • பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொ ள்ளப்ப ட்டு வருகிறது.

கோவை,

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணம் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ரத்தினபுரி, டாடாபாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் ஒரே நாளில் நடந்தது.

இது குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக மாநகர போலீஸ் சார்பில், 7 தனிப்ப டைகள் அமைக்கப்பட் டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்க ளை தேடி வருகின்றனர்.

மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா க்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 2-வது நாளாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்ப ட்டது. பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொ ள்ளப்ப ட்டு வருகிறது.

மேலும் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ரத்தினபுரி, என பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. வாகனங்களில் வருபவர்க ளிடம் தீவிர விசாரணை நடத்தி, அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News