உள்ளூர் செய்திகள்

தொப்புள் கொடியுடன் பச்சிளங்குழந்தை பிணம்

Published On 2023-04-23 10:30 GMT   |   Update On 2023-04-23 10:30 GMT
  • சிசுவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
  • எதனால் குழந்தையை வீசி சென்றனர் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூதலூர்:

பூதலூர் அருகே உள்ள முத்தாண்டிப்பட்டி ஆலடிஏரி பகுதியில் உள்ள சிறிய பாலத்தின் அருகே பிறந்த தொப்புள் கொடியுடன் பெண் சிசு காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக பூதலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் அங்கு சென்று காயங்களுடன் கிடந்த பெண் குழந்தையை மீட்டு உடனடியாக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிசுவை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) அன்பரசன் பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.பூதலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் யார்? எதனால் குழந்தையை வீசி எறிந்து சென்றனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News