உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் சுதந்திர தின விழா

Published On 2023-08-16 10:12 GMT   |   Update On 2023-08-16 10:12 GMT
  • வன்முறையற்ற பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்.
  • முடிவில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நன்றி கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பில் சுதந்திர தி ன விழா கொண்டா டப்பட்டது.

இதற்கு கல்லூரியின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார்.

கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்ப வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் ஆறுமுகம் அனை வரையும வரவேற்றார். நிகழ்ச்சியில் தாளாளர் பெருமாள் பேசுகையில், தாய்மொழி யையும், தாய் நாட்டையும் இரு கண்களாக போற்றி பாதுகாக்க வேண்டும். தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணற்ற தியாகிகள் தங்களின் உயிரை இழந்து புகழ் சேர்த்துள்ளனர்.

வன்முறையற்ற பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் என கூறினார்.

இதில் நிர்வாகஅலுவலர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News