உள்ளூர் செய்திகள்

கோபாலசமுத்திரம் கிராம உதயம் அலுவலகத்தில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்

Published On 2023-08-15 14:40 IST   |   Update On 2023-08-15 14:40:00 IST
  • சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதினம் மற்றும் கிராம உதயம் வெள்ளி விழா ஆண்டு குறித்து சிறப்புரையாற்றினார்.
  • நிகழ்ச்சியில் தனி அலுவலர் கணேசன், பேச்சியம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நெல்லை:

கிராம உதயம் சார்பாக 77-வது சுதந்திர தினம் மற்றும் கிராம உதயம் 25-வது வெள்ளிவிழா தினத்தை முன்னிட்டு 250 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்ச்சி கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் நடைபெற்றது.

கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதினம் மற்றும் கிராம உதயம் வெள்ளி விழா ஆண்டு குறித்து சிறப்புரையாற்றினார்.

கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியில் தனி அலுவலர் கணேசன், பகுதி பொறுப்பா ளர்கள் முருகன், பாலசுப்பிர மணியன், மரியமிக்கேல் ஜீவா, பேச்சியம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் கிராம உதயம் 25-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கிராம உதயம் அனைத்து தன்னார்வ தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News