உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1572 கன அடியாக அதிகரிப்பு
- கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
- இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1562 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 1572 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணை நீர்மட்டம் 102.77 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யும் பட்சத்தில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.