உள்ளூர் செய்திகள் (District)

விழாவில் மாணவி ஒருவருக்கு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.

நகராட்சி பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா

Published On 2023-07-06 09:56 GMT   |   Update On 2023-07-06 09:56 GMT
  • நகராட்சி பள்ளியில் பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.
  • மாணவர்களின் இயல், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மன்னார்குடி:

மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராசுப்பிபிள்ளை,

நகர மன்ற உறுப்பினர் ஶ்ரீதர் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். மாணவர்களின் இயல், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பல்வேறு இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற,

பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு

நூல்கள் நினைவுப்பரிசாக வழங்கபட்டன.

பிற துறை ஆசிரியர்கள் வாழ்த்துரையாற்றினர்.

பள்ளியின் முதுகலை த்தமிழாசிரியர் ராசகணேசன் வரவேற்பு ரையாற்றினார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் உயரிய விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முனைவர் ராசகணேசன் கவுரவி க்கப்பட்டார்.

முடிவில் பட்டதாரி தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News