உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிய காட்சி.

விருத்தாசலத்தில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

Published On 2022-08-25 09:28 GMT   |   Update On 2022-08-25 09:28 GMT
கடலூர் ரோட்டில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் 2-வது நாளாக இன்று அகற்றம் செய்யப்பட்டன.

கடலூர்:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விருத்தாசலத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விருத்தாசலம் தாசில்தார் தனபதி தலைமையில் நடைபெற்றது.

கடலூர் ரோட்டில் உள்ள முல்லா ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள் 2-வது நாளாக இன்று அகற்றம் செய்யப்பட்டன. விருத்தாசலம் தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அப்புறப்படுத்தினர்.

அப்போது எந்தவித பிரச்சினை சம்பவம் எதும் நிகழாமல் இருக்க விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரப்பு அகற்றும் பணி நடைபெற்றதால் கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் சாலை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News