உள்ளூர் செய்திகள்
விருத்தாச்சலத்தில்பெண் தூக்கு போட்டு தற்கொலை
கடலூர்:
விருத்தாசலம் வள்ளாலார் தெருவைச் சேர்ந்தவர் ஷகிம் மனைவி சிவரஞ்சனி(29). இவர் கடந்த சில தினங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் சிவரஞ்சினிக்கு வயிற்றுவலி வந்துள்ளது.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார், சிவரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.