உள்ளூர் செய்திகள்
பாகலூர் ஊராட்சி தலைவர்ஜெயராமன் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
லிங்காபுரம் கிராமத்தில் ரூ.5.82 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் பணி
- பாகலூர் ஊராட்சி தலைவர்ஜெயராமன் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
- ரூ.5.82 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்.
ஓசூர்,
ஓசூர் ஒன்றியம் பாகலூர் ஊராட்சிக்குட்பட்ட லிங்காபுரம் கிராமத்தில் ரூ.5.82 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, பாகலூர் ஊராட்சி தலைவர்ஜெயராமன் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் சர்வேஷ் ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.