பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தில் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள் 31-ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் -வேளாண்மை உதவி இயக்குனர் அறிவிப்பு
- ஆதார் விவரங்கள் சரிபார்த்து செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைத்திடும்.
ராயக்கோட்டை,
கெலமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜான்லூர்து சேவியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம், வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கெலமங்கலம் வட்டாரத்தில் 15 ஆயிரத்து 828 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்த தேதியின் அடிப்படையில், விவசாயிகளுக்கு 11 தவணை வரை ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் 12-வது தவணை தொகை பெறுவதற்கு ஆதார் விவரங்கள் சரிபார்த்து செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிஷான் கவுரவநிதி திட்டத்தின் கீழ் இதுவரை கெலமங்கலம் வட்டாரத்தில் 7 ஆயிரத்து 414 விவசாயிகள் மட்டுமே ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 8 ஆயிரத்து 414 விவசாயிகள் வருகிற 31-ந் தேதிக்குள் இ.கே.ஒய்.சி முறையில் ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்தால் மட்டுமே தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.
பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் அனைவரும் ஆன்லைன் பதிவு மூலம் புதுப்பித்திட தங்களது ஆதார் அட்டையுடன் இ&சேவை
மையத்தையோ அல்லது தபால் அலுவலகத்தையோ அணுகி, தங்களது விரல் ரேகை மூலம் பதிவு செய்து புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்த முறையில் பாரத பிரதமரின் கவுரவ நிதி திட்ட விவசாயி கள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வருகிற 31-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைத்திடும் என்பதை தெரி வித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.