உள்ளூர் செய்திகள்

இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தஞ்சையில், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-15 15:22 IST   |   Update On 2022-11-15 15:22:00 IST
  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.
  • இலவச பஸ் பயண அட்டையின் கிலோ மீட்டரை அதிகப்படுத்த வேண்டும்.

தஞ்சாவூர்:

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும், இலவச பஸ் பயண அட்டையின் கிலோ மீட்டரை அதிகப்படுத்திட வேண்டும், அனைத்து நிறுத்தங்களிலும் பஸ் நின்று செல்ல வேண்டும் , பஸ்சில் செல்லும் மாணவர்களிடம் நடத்துனர் தகாத வார்த்தையில் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இன்று தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட துணை தலைவர்பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பா ட்டத்தில் கோரி க்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News