தஞ்சையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- மழை பெய்ததால் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலையில் உள்ளது.
- குருவை சாகுபடியில் யூரியா தட்டுப்பாடு அதிகம் இருந்த காரணத்தினால் மகசூல் பாதிப்பு.
தஞ்சாவூர்:
தஞ்சையில் கோட்டா ட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். இதுகுறித்து அனைத்து துறை அதிகாரியு டன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர்உறுதி அளித்தார்.
பின்பு வெளியே வந்துவிவ சாயிகள் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு நிலவறது ஆடுகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் நடவு நட்ட பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலையில் உள்ளது.
பயிர்களுக்கு யூரியா மற்றும் பொட்டாஷ் தட்டுப்பாடாக உள்ளதால் உரம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறோம்.
அதேபோல் குருவை சாகுபடியில் யூரியா தட்டுப்பாடு அதிகம் இருந்த காரணத்தினால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது.
சில கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் இல்லா ததால் பட்டா சிட்டா வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
எனவே இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் உரம் தட்டுப்பாட்டை போக்கும் வரை வகையில் மத்திய மாநில அரசு நடவடி க்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினார்.