உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், வருகிற 24-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2023-05-16 10:06 GMT   |   Update On 2023-05-16 10:06 GMT
  • காலை 10.30 மணிக்கு தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
  • தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் கலந்து கொள்ளலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News