உள்ளூர் செய்திகள்

ஸ்கேட்டிங் நிகழ்ச்சியை கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சையில், 24 மணி நேர தொடர் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி- கூடுதல் கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-05-06 10:11 GMT   |   Update On 2023-05-06 10:11 GMT
  • 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • சுழற்சி அடிப்படையில் இந்த ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர்:

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ரோல்பால் சங்கம் சார்பில் புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 24 மணி நேர தொடர் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மணி நேர சுழற்சி அடிப்படையில் இந்த ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஆசிப் அலி, தென்னிந்திய ரோல்பால் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு ரோல்பால் சங்க துணை தலைவர் சரவணன், பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட ரோல்பால் சங்க செயலாளரும், சாய் ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பயிற்றுனருமான மணிகண்டன் செய்திருந்தார்.

Tags:    

Similar News