உள்ளூர் செய்திகள்

சூளகிரி பகுதியில் மீண்டும் அதிகரித்து வரும் விளம்பர பதாகை கலாச்சாரம்

Published On 2022-08-24 15:03 IST   |   Update On 2022-08-24 15:03:00 IST
  • விளம்பர தட்டிகளை அதிக அளவு இரும்பு சட்டங்கள், மர சட்டங்களில் ஒட்டி தெருவீதிகள், சாலை ஓரங்கள் முக்கிய பகுதிகளில் வைத்து வரும் மோகம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
  • அதிவேக காற்றினால் இவை சாய்வதும், முறிந்து விழுவதும் அதிகரித்து வருகிறது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மற்றும் சுற்றுவட்டாரங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் திருமணம், பிறந்தநாள், கடை திறப்பு, பதவிஏற்பு என விளம்பர தட்டிகளை அதிக அளவு இரும்பு சட்டங்கள், மர சட்டங்களில் ஒட்டி தெருவீதிகள், சாலை ஓரங்கள் முக்கிய பகுதிகளில் வைத்து வரும் மோகம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

அதிவேக காற்றினால் இவை சாய்வதும், முறிந்து விழுவதும் அதிகரித்து வருகிறது.

ஒரு நாள் கொண்டாட்டம் என வைக்கப்படும் விளம்பர தட்டிகளை நாள் கணக்கில் ஆகியும் அகற்றுவதில்லை.

இதை அதிகாரிகள் கட்டுபடுத்தவும், விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags:    

Similar News