உள்ளூர் செய்திகள்

பாப்பாரப்பட்டியில் தந்தையை தாக்கிய மகள் உள்பட 3 பேர் கைது

Published On 2022-08-13 15:33 IST   |   Update On 2022-08-13 15:33:00 IST
  • எனது தந்தைக்கு கடன் கொடுக்காதீர்கள் அவர் சரிவர செலுத்த மாட்டார் என்று கூறியுள்ளார்.
  • ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் தனது மகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாப்பாரப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது56). கூலி தொழிலாளியான இவர் தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

நேற்று அவரது வீட்டிற்கு தனியார் வங்கி அதிகாரிகள் வந்து அவரது மகளிடம் தந்தை கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

அதற்கு அவரது மகள் விசாதேவி (26) எனது தந்தைக்கு கடன் கொடுக்காதீர்கள் அவர் சரிவர செலுத்த மாட்டார் என்று கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் தனது மகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மனைவி மாது, விசாதேவி, மருமகன் பெருமாள் ஆகிய மூவரும் சேர்ந்து இரும்பு ராடால் கஜேந்திரனை தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த கஜேந்திரனை மீட்டு தருபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News