உள்ளூர் செய்திகள்

ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணர்வு

Published On 2022-09-12 15:43 IST   |   Update On 2022-09-12 15:43:00 IST
  • மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
  • தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

ஊட்டி :

ஓவேலி பேரூராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குப்பைகளைத் தரம் பிரித்தல், உரமாக்குதல் குறித்து செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் செயல் விளக்கமளித்தாா்.

தொடா்ந்து பெரியாா் நகா் மற்றும் காந்தி நகா் பகுதியில் மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பேரூராட்சிப் பணியாளா்கள், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.  

Tags:    

Similar News